நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 31, 2013

தை வெள்ளி - 03

thanjavur14
அருள்மழை பொழிந்திடும் அங்கயற்கண்ணி
தை மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தரிசனம் -

மதுரையம்பதி.

2500 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான தலம்.  

கோயில் நகர் , திருவிழா நகர் , தூங்கா நகர் என்றெல்லாம் புகழப்படும் மாநகர்.

தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல தலங்களுக்கும் சென்று வந்த இந்திரன் - கடம்பவனத்தில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்று, அங்கு இந்திர விமானத்துடன் கூடிய கோயிலை கட்டினான்.  

ஈசன் தனது பெருஞ்சடையிற் திகழும் பிறையினிடத்துள்ள அமிர்தத்தைத் தெளித்து, நாக விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை என திருப்பெயர்.

தேவாரத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்''திருஆலவாய்'' என்றே குறிப்பிடுகின்றனர். 

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ''ஆடக மதுரை'' என்றழைத்து அக மகிழ்கின்றார்.

பல புராண இலக்கியப்  பெருமைகளையுடைய - பாண்டியத் திருநாட்டினை நீதிநெறி வழுவாது ஆட்சி செய்த மலையத்துவச பாண்டியன் புத்திரப்பேறு இல்லாததால் தன் மனைவி காஞ்சனமாலையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். 

அப்போது காஞ்சனமாலை முற்பிறவியில் செய்த தவப்பயனாக,  வேள்விக் குண்டத்தினின்று வலஞ்சுழித்து எழுந்த அக்னியின் ஊடாக -  

மூன்று தனங்களையுடைய - குழந்தை என அம்பிகை தோன்றினாள். 

வாரி அணைத்து மகிழ்ந்த அரசன் குழந்தையின் மூன்று தனங்களைக் கண்டு  வருந்திய போது இறைவன் அசரீரியாக, ''இக்குழந்தை பருவம் எய்தி -  மணவாளன் நேர்ப்படும் போது ஒரு தனம் மறையும்'' என்று கூறினார். 

குழந்தை "தடாதகை'' என்ற திருப்பெயருடன் சிறப்புடன் வளர்ந்து பல கலைகளையும் ஓதாமல் உணர்ந்து சிறந்து விளங்கினாள். தக்க வயதில் தடாதகைக்கு பாண்டிய நாட்டின் மணிமகுடம் சூட்டப்பெற்றது. 

மன்னன் மலையத்துவசன் விண்ணுலகு எய்தினார். தந்தைக்குப் பின் சிறப்பாக ஆட்சி செய்த தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். 

நால்வகைப் படைகளுடன் ''வீர உலா'' புறப்பட்டு திக்விஜயம் செய்து அனைத்து நாட்டினையும் வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். அப்படிக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. 

முன்னர் அசரீரி அறிவித்தபடி இறைவனே மணவாளன் என்பது அறியப் பட்டதும், பெருமகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. 

பங்குனி உத்திர நன்னாளில் சோமவாரத்தில் - திருமால் முதலிய தேவர்களும் சிவகணங்களும் முனிவர்களும் முன்னிருக்க,  பிரம்மதேவன் உடனிருந்து  மங்கல நிகழ்வுகளை நடத்த - 

''சென்றடையாத திரு உடைய செல்வனாகிய'' சோமசுந்தரனின் வலப்புறத்தில் திருமணக் கோலங்கொண்டு ''திருநிறைச்செல்வியாக''  அன்னை நின்றிருக்க, நெடுமால் கார்மேகவண்ணன் - கள்ளழகனாக - அண்ணனாக இடப்புறம் இருந்து, கன்யாதானம் செய்து கொடுக்க

எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெறும் வண்ணம் -  சிவபெருமான் திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார். 

எம்பெருமானே - எந்தை சுந்தரேசனாக, எம்பெருமாட்டி தடாதகைப் பிராட்டியே எந்தாய் மீனாட்சியாக விளங்கி எம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி இடர் தீர்க்கின்றார்.  சுவாமியின் வலப்புறத்தில், 

அன்னை மீனாட்சி - இடைநெளித்து திருக்கரத்தினில் மலர்ச்செண்டுடன் கொஞ்சுங்கிளி ஏந்தியவளாக, நின்ற திருக்கோலத்தில் அழகே உருவாக மரகத மேனியளாக அருள் பாலிக்கின்றாள்.

அன்னைக்கு பல திருநாமங்கள்.  இருந்தாலும்,  மீனாட்சி, அங்கயற்கண்ணி  -  என அழைக்கப்படுவதில்தான் அவளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி.

கயற்கண்ணி - மீன் போன்ற கண்களை உடையவள் - என்பதால் மட்டுமல்ல,

மீன் இமையாமல் இரவும் பகலும் விழித்திருந்து - தன் முட்டைகளைப் பார்வையினால்  - குஞ்சுகளாக ஆக்குவதைப் போல,

அன்னையும் கண் இமையாமல் புவனங்களைக் காத்து வருவதால்!...  

தன்னை நோக்கி வரும் பக்தர்களை - தானும் நோக்கி அருள் பாலிப்பதால்!..

சக்தி பீடங்களுள் மதுரையம்பதி  -  ''ராஜமாதங்கி சியாமளா'' பீடம் .

அவளைச் சரணடைவோம்!....

அடுத்து வருவதை அவள் பார்த்துக் கொள்வாள்!... 

தொடுக்குங் கடவுள் பழம்பாடற் 
றொடையின் பயனே! நறை பழுத்த 
துறைத் தீந்தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே! அகந்தைக்கிழங்கை அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு 
ஏற்றும் விளக்கே! வளர்சிமய 
இமயப் பொருப்பில் விளையாடும் 
இளமென் பிடியே! எறிதரங்கம்  

உடுக்கும் புவனங் கடந்து நின்ற 
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு 
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய் 

மடுக்குங் குழற்காடேந்தும் இள
வஞ்சிக்கொடியே! வருகவே! 
மலையத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே! வருக... வருகவே!...
                                            - குமரகுருபரர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

திருச்சிற்றம்பலம்.

புதன், ஜனவரி 30, 2013

வாழ்க நீ... எம்மான்!..

 ஜனவரி - 30
மகாத்மா காந்திஜியின் நினைவு நாள்


வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு  நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா!.. நீ வாழ்க!.. வாழ்க!.. 
                                                                                      - மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

தங்கள் வாழ்வும் வாக்கும் எம்மை
என்றும் வாழ்விப்பதாக!...

செவ்வாய், ஜனவரி 29, 2013

விளக்கேற்றுக!..


விளக்கேற்றுக!.... உள்ளத்திலும்!... இல்லத்திலும்!...

thanjavur14
- நன்றி -
தினமலர், 29.01.2013.

கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பள்ளி மாணவியர் பங்கேற்ற  விளக்கேற்றும் விழா நடந்ததுள்ளது.

இதைப் போல எல்லா இந்து சமய கல்வி நிறுவனங்களும் மரபு சார்ந்த  நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும். உண்மையான  சமய நெறியினை இளம் பருவத்திலேயே உணரும்படி செய்தல் வேண்டும்.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

திருவிடைமருதூர்

மகர மாதமாகிய தை மாதத்தின் திருநாட்களுள் சிறப்பானதும்  - தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவதுமான  தை பூசம்  இன்று சீருடனும் சிறப்புடனும் நிகழ்வுறுகின்றது.

தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம். 

தமிழகத்தில் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் - என புனித நூல்களைப் பாராயணம் செய்து - தம் இல்லங்களில் இறை அன்புடன் விரதம்  அனுசரித்து நிறைவாக -

சிவாலயங்களுக்கும் முருகன் திருக்கோயில்களுக்கும் குடும்பத்துடன் சென்று ஆலய தரிசனம் செய்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவரும் கண்டு மகிழ - அம்பிகையுடன்  ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்திய சிவபெருமான்    - 

தை பூச நாளில் அயிராவணத்துறை எனும் திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருள்கின்றனர்..... அது எங்கே!..... அந்தத் திருத்தலம் எங்கே!...

அந்தத் திருத்தலம் தான்....

சிவபெருமானுடைய யானையாகிய அயிராவணம் பணிந்து வணங்கிய திருத்தலம்.

உமாதேவியும், விநாயகரும், முருகனும், உருத்திரர்களும், பிரமனும், மகாவிஷ்ணுவும் வழிபட்ட திருத்தலம்.

அம்பிகை - ஐயனின் அன்பிற்பிரியாளாகி  - வலப்புறத்தில் கிழக்கு நோக்கி சன்னதி கொண்ட திருத்தலம்.

மூகாசுரனை அழித்த அன்னை வடக்கு முகமாக அருள் பொழியும் திருத்தலம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் பூமியில் சிவவழிபாடு செய்த திருத்தலம்.

மன்னர் வரகுண பாண்டியரை விட்டு அவருடைய கொலைப்பழி (பிரம்மஹத்தி) நீங்கிய திருத்தலம்.

சித்த சுவாதீனம் அற்றோர் - மனநலம் குன்றியோர் - பிணி நீங்கப் பெறும் திருத்தலம்.

மிகப் பெரியதான நந்தி - சுதை வடிவில் விளங்கும் திருத்தலம்.

மருத மரம் தல விருட்சமாக விளங்கும் திருத்தலம்.

பட்டினத்தாரும் பத்ருஹரியும் தவமிருந்த திருத்தலம்.

மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்த திருத்தலம். 

- இப்படி இன்னும் பற்பல சிறப்புகளையுடைய திருத்தலம் தான்  -

வடக்கில் ஸ்ரீசைலம் தலை மருது,  தெற்கில் அம்பாசமுத்திரம் கடை மருது என விளங்க - நடுவில் இடை மருது என விளங்கும்  திருவிடைமருதூர்.

இடைமருது உறையும் எந்தை
இங்கே அருள் பொழியும் ஈசனின் திருப்பெயர் - இடைமருதீசர், மருதவாணர். அரவணைக்கும் அன்னையின் திருப்பெயர் பெருநல நன்முலை நாயகி. தீர்த்தம் காவிரியும் அயிராவண திருக்குளமும். 

இறைவனின் திருமேனி பெரியது. ஜோதி மகாலிங்கம் என்று அன்பர்கள் புகழ்ந்து வணங்குகின்றனர். 

காரணம் - மாலை வேளையில் பூஜை நேரத்தில் சன்னதியின் அலங்கார அணி விளக்குகளின் சுடர் ஒளியினில் மூலஸ்தானம் திருக்கயிலாயம் எனத் திகழ்வதால்.

இந்த திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை  நெடுஞ்சாலையில் - ஆடுதுறையை அடுத்து உள்ளது.

தேவாரம் எனும் தேன் மழை பொழிந்த - திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும் வலஞ்செய்து வணங்கிய திருத்தலம்.

திருவாசகம் எனும்  அமுதினை அருளிய மாணிக்கவாசகர் ''இடைமருது உறையும் எந்தாய் போற்றி!''  - எனப் புகழ்ந்த திருத்தலம்.

இத்திருத்தலத்தில் தனது மற்றோர் வாகனமாகிய அயிராவணம் எனும் யானையின் விருப்பத்தினை - ஈசன் ஈடேற்றி - தை பூச நாளில், யானை தவமிருந்த திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருளினார். 

இந்தத் திருக்கோயிலினுள் கருவறைக்கு முன்பாக ஈசனின் வலப்பாகத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து - விநாயகர் சிவபூஜை செய்து மகிழ்கின்றனர்.

இத்திருத்தலத்தில் பூச நாளில் நீராடுதலைப் பற்றி - 

"ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே'' (5/14/1) - என்று திருநாவுக்கரசர் புகழ்ந்துரைக்கின்றார். 

''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன்  உறைகின்ற இடைமருது'' (1/32/5) - 

என்றும் ,

''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த'' (2/56/5)

என்றும் திருஞானசம்பந்தர் போற்றி மகிழ்கின்றார்.

மயிலாப்பூரில் - நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் -

''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம்....'' (2/47/5) -

"நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்...பூம்பாவையே!....'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார்.

தவிரவும், காவிரி வலஞ்சுழித்த திருத்தலமும்  - 

தேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க -   அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு  - விநாயகர் விளங்கும்  திருத்தலமும் ஆகிய - திருவலஞ்சுழியில் - திருஞானசம்பந்தப்பெருமான்  பணிந்து வணங்கும் போது - 

''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர் 
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' (2/2/6)

''பலவகையான  மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி - உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே!..'' -

என்று சிவபெருமானின் நல்லருளைப் பெறுவதற்கான, எளிய வழியினைத் திருக்குறிப்பாக பாடியருள்கின்றனர்.

நாமும் அவ்வழி நின்று வணங்கி - இடர் தீர்ந்து இன்புறுவோமாக!....

திருச்சிற்றம்பலம்.

சனி, ஜனவரி 26, 2013

தைப்பூசம்

தை 14 (27 - 01 - 2013 ) ஞாயிற்றுக்கிழமை

மகர மாதமாகிய தை மாதத்தில் நிகழ்வுறும் திருநாட்களுள் பூசம் சிறப்பானது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவது தை பூசம் ஆகும். 

தமிழகத்தின் பல சிவாலயங்களிலும் தனித்து விளங்கும் முருகன் திருக்கோயில்களிலும் அன்பர்கள் குடும்பத்துடன் சென்று வழிபடுவதைக் காணலாம். 

பக்தி பூர்வமானதும் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் இல்லங்களில் அன்புடன் அனுசரிக்கப்படுவதும் தை பூசம் ஆகும். தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம்.

எனவே ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக இந்நாளினைக் கொண்டு, அடியார்கள் விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும் முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 

thanjavur14
அருள்மிகு தண்டாயுதபாணி, பழனி
தமிழகத்தில் பழனியம்பதியில் தை பூசம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு நேர்ந்து கொண்டு ஆயிரம் ஆயிரமாய் -  மயில்காவடி, மச்சக்காவடி, சர்க்கரைக்காவடி, சந்தனக்காவடி, பால் காவடி, பன்னீர் காவடி என எடுத்து வந்து மலையேறி தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.   

தை பூசத்தன்று பழனி முருகனைத் தரிசனம் செய்ய - தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வருகின்றனர்.

சிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தை பூச நாளில் பகல் பொழுதில் - அம்பிகையுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.

இலங்கையிலும், சிங்கப்பூரிலும் மலேசியாவில் பத்துமலை முருகன் திருக்கோயிலிலும் மற்றும் தண்ணீர்மலை  முருகன் திருக்கோயிலிலும் வெகு சிறப்பாக தை பூசப் பெருவிழா நடைபெறுகிறது. நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதை காணலாம்.  

தை பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.

லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தை பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில்  சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து  தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம்  நிகழ்வுறும்.

தஞ்சை - கரந்தையில் உள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் தை பூச தினத்தன்று மாலை,

thanjavur14
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி அம்பாள்
அருள்மிகு  வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,

thanjavur14
அருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை
வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.

ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக விளங்கும் இந்நாளில், கை நிறைய மலர்களைக் கொண்டு, முருகனின் திருப்பாத மலர்களைப் போற்றி வணங்குவோமாக!... 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!.....

திருச்சிற்றம்பலம்

என் இனிய இந்தியா

குடியரசு தினம்
26.01.2013

வாழ்க பாரதம்!... வெல்க பாரதம்!...
வந்தே மாதரம்!... வந்தே மாதரம்!...

என் இனிய பாரதம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே! - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே! - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே! - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் 
வாயுற வாழ்த்தேனோ! - இதை
''வந்தே மாதரம் வந்தே மாதரம்'' 
என்று வணங்கேனோ!....
                                                                                          - மகாகவி பாரதியார்.

வெள்ளி, ஜனவரி 25, 2013

தை வெள்ளி - 02

காஞ்சி காமகோடி ஸ்ரீ காமாட்சி அன்னை.

மங்களகரமான தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இன்று. 

இல்லங்கள் தோறும் பெண்கள் விரதமிருந்து - சுப செளக்கிய,  செளபாக்கியங்களை வேண்டி தீபங்களை ஏற்றி வைத்து அம்பிகையின் பொற்பாதங்களைப் பணியும் நாள். 

கிராமங்களிலும் , நகரங்களிலும்  - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் அம்பிகையின் சன்னதிகளில் சிறப்பாக , அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள். 

நாமும் நம் தளத்தில் அம்பிகையை அலங்கரிப்போம்...

காஞ்சி காமாட்சி அன்னை
அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஸ்ரீகாமகோடி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்பவள் ஸ்ரீகாமாட்சி அன்னை. ஐப்பசி மாதத்தில் பூர நட்சத்திரம் அன்னையின் அவதார நாள். துர்வாச முனிவர் அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது தல புராணம்.  பரசுராமரும் தசரதரும் வழிபட்ட தலம். ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற பெருமையினை உடையவள் அன்னை காமாட்சி.. 

மக்கள் அறியாமையினால் உயிர்களை வதைத்து பலியிட்டு நிகழ்த்திய வழிபாடுகளினால் கோபமடைந்து உக்ரத்துடன் இருந்த காமாட்சி அம்மனை - ஆதிசங்கரர் சாந்தப்படுத்தி, ஸ்ரீ சக்கரம் வடிவமைத்து அதனை அம்மனுக்கு முன்னால் பிரதிஷ்டை செய்து, உக்ர சக்தியை அருள் சக்தியாக மாற்றி -  ''ஆனந்தலஹரி'' பாடிப் புகழ்ந்தார். 

வைணவத் திவ்ய தேசங்கள் 108 என அறிந்துள்ளோம். அவற்றினுள் ஒன்றான அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உள்ளே விளங்குகின்றது. 

தன் அழகின் மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமி - தன்னை உணரும் வண்ணம் அவளை விட்டு அழகு நீங்கும்படி மகாவிஷ்ணு சபித்தார். இதனால் மனம் கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து, இத்தலத்திற்கு அரூபமாக வந்து தங்கி அன்னையைப் பணிந்து  மனதார விஷ்ணுவை வணங்கி வந்தாள்.

தவத்தின் பயனால் அரூப வடிவம் மாறி -  முன்னைவிட அழகுடன் திகழ்ந்த மகாலட்சுமியை, குறும்புடன் கள்ளத்தனமாக மறைந்திருந்து பார்த்ததனால் விஷ்ணுவுக்கு இத்தலத்தில்  "கள்ளப் பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. அண்ணனும் தங்கையும் விளங்கும் திருக்கோயில் இது.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கியவளாக - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன்  எனும் பஞ்சப் பிரம்ம ஆசனத்தில், யோக நிலையில் -

திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஏந்தி, சந்திர கலையினைச் சூடியவளாக  காட்சி அளிக்கின்றாள். அன்னையின்  வலக் கரத்தினில் கிளி ஒன்றும் திகழ்கின்றது. காமாட்சி அன்னைக்கு திரிபுரை, லலிதா, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசக்கரநாயகி என்ற திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சியில் உள்ள சிவபெருமானின் திருக்கோயில்கள் எதிலும் அம்பிகையின் சன்னதி கிடையாது. அனைத்தினுக்கும்  ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையே பிரதான சக்தி என விளங்குகின்றாள்.. 

பங்காரு காமாட்சி, தஞ்சை
இங்கு காமகோடி காமாட்சி, தவ காமாட்சி, பங்காரு (ஸ்வர்ண) காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து திருமேனிகள். அவற்றுள் பங்காரு காமாட்சி தற்போது தஞ்சையில் குடிகொண்டு அருள்புரிகின்றாள்.

இந்தத் திருக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி - என தனிச்சன்னதிகள் விளங்குகின்றன. 

அன்னையின் திருவடிகளில் நவக்கிரக நாயகர்களும் தஞ்சம் புகுந்து வணங்கிக் கிடப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

திருக்கோயிலில் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் காமாட்சி அன்னை வீற்றிருக்கின்றாள். காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணி சன்னதியில்  தர்மத் துவாரம், பிட்க்ஷை துவாரம் என உள்ளன.

அம்பிகையைப் பணிந்து  பிச்சைத் துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என பிச்சை கேட்டு
வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இப்படி வழிபட்டுக் கேட்டால் நாம் உண்ணும்  உணவினை பெருத்த சிரமங்கள் ஏதும் இன்றி நமக்குக் கொடுத்து அம்பாள் காத்தருள்வாள் என்பது நம்பிக்கை. வீட்டில் உணவுக்கு பஞ்சம் இராது என்பது திருக்குறிப்பு. 

ஏனெனில் சிவபெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு   உலகம்  உய்ய முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்தவள் காமாட்சி அன்னை.  

ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் சாபம் பெற்ற அம்பிகை, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் இயற்றி வழிபட்டாள்.  அவ்வேளையில் அன்னையின் தவநிலையினைச் சோதிக்க - ஈசன் ஆற்றில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தினார்.  

வெள்ளப் பெருக்கினைக் கண்டு அஞ்சிய அன்னை சிவலிங்கத்தினை மார்புறத் தழுவி பெருமானின் திருமேனியினைக் காப்பாற்றினாள். அதனால் அன்னையின் திருமுலைத் தழும்பும் திருக்கரங்களின் வளைத்தழும்பும் சிவலிங்கத்தின் மீது பதிந்தது.  அதனால் ஈசன் மனங்குளிர்ந்து அன்னையை ஆட்கொண்டருளினார் என்பது புராணம். 

திருவொற்றியூரில் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் -   சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த  உறுதியினை  மீறி - அவரை விட்டுப் பிரியும் போது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இரு கண்களிலும் பார்வை பறி போயிற்று. வழி தடுமாறி நடந்த  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மின்னல் கொடி என வழி காட்டி, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் கொடுத்து, காஞ்சிக்கு அழைத்து வந்து வலக்கண்ணில் பார்வையைக் கொடுத்தருளியவள் அன்னை காமாட்சி.

''எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
'' 

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடியருள்கின்றார். 

காமாட்சி அன்னையின் கருணையினால், கண்களில் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஊனக் கண்களுடன் ஞானக் கண்களும் விளங்கும் என்பது திருக்குறிப்பு.
  
நாமும் நலம் பெற அன்னையின் பொற்பாதங்களைப் பணிவோம். 

ஞாயிறு, ஜனவரி 20, 2013

தை கார்த்திகை


thanjavur14
ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான்
மனம் ஒன்றி நோற்பவர்களுக்கு நல்ல பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும் கார்த்திகை விரதம் விரதங்களுள் சிறந்ததாக விளங்குவது. அதன் பெருமைகள் அளவிடற்கரியது. 

முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக திருஅவதாரம் செய்த போது - வாரி அணைத்து அமுதூட்டிய தேவ மகளிர் அறுவரையும் சிவபெருமான் வாழ்த்தி, 

''என்றும் விண்ணில் கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து, முருகனை நினைந்து விரதம் ஏற்பவர்க்கு ஏற்றன எல்லாம் அருள்க'' என்று  சிறப்பித்து அருளினார். 

அப்படி இறைவனால் - சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை விரதம் ஆண்டு முழுதும் அடியார்களால் மேற்கொள்ளப்பட்டாலும்  தனித்தன்மையான சிறப்பினைப் பெறுவது ஆடி,  தை மாதங்களில் தான். 

அந்த வகையில் நாளைய தினம் (தை - 08, திங்கட்கிழமை) சோமவார கார்த்திகையாக புலர்கின்றது (நன்றி - சுத்த வாக்கிய பஞ்சாங்கம்). 

நம் வாழ்வின் வழித்துணையாய் வந்து நமக்கு உதவும் வள்ளலை, முருகப் பெருமானை - நாளும் நமது வழிபாட்டில் பாடிப் பரவி, நல்லதெல்லாம் பெற்றிடுவோம்.

அருணகிரிநாதர் அருளிய 
சுவாமிமலைத் திருப்புகழ்.

பாதி மதிநதி போது மணிசடை
     நாதர்  அருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காதும்  ஒருவிழி காகம்  உறஅருள்
     மாயன்  அரிதிரு ...... மருகோனே

காலன்   எனையணு காமல்  உனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருலகு
    ஆளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடும் மயிலினில்   ஏறி அமரர்கள்
     சூழ வரவரும் .....  இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனில் ......  உறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே...

பிறைநிலவு, கங்கைநதி, கொன்றை  - இவற்றை  ஒளிரும் ஜடாமுடியினில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரேசனே!...

சர்க்கரைப் பாகு, செழுங்கனிகள் - இவற்றின் சுவையினை மிஞ்சிய  - இனிய மொழியை உடையவளும் ,  வேடர்கோன் நம்பிராஜனின் மகளும் ஆகிய குற மங்கை வள்ளியின் மென்மையான  பாதத்தினை அன்பின் மிகுதியால் வருடிய மணவாளனே!...

கருத்தழிந்த காகத்தின் தவறுக்காக ஒரு கண்ணின் மணியினைப் பிரித்துத் தண்டித்து அருளிய மாயவனாகிய ஹரி நாராயணனுக்கும் மாயனைப் பிரிந்தறியாத அன்னை மகாலக்ஷ்மிக்கும் அன்பான மருமகனே!...

என்னை - யமன்  அணுகாதபடிக்கு உன்னிரு திருவடித் தாமரைகளில் மனம் பொருந்தி வழிபடும் புத்தியினை எனக்கு அருள்வாயாக!...

ஆதியில் - சூரபத்மனின் கொடுஞ்சிறையினின்று - பிரமனோடு இந்திராதி தேவர்கள் அனைவரையும் மீட்டு தேவலோகத்தை மீண்டும் இந்திரனே ஆளும்படிக்கு அருளியவனே!...  

அப்படி தேவலோகத்தினை மீண்டும் பெற்ற தேவர்கள் உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடியபடி - உனைச் சூழ்ந்து வர, நடனம் ஆடும் மயிலின் மீது திருக்கோலம் கொண்டு - இவ்வுலகினை வலம் வருகின்ற இளையவனே!...

அடர்ந்து வளர்ந்த மாஞ்சோலைகள் நிறைந்த சுவாமிமலைதனில் திருக் கோயில் கொண்டு  வீற்றிருப்பவனே!...

சூரனின் உடல்  இற்று வீழவும், பெருங்கடல் வற்றிப் போகவும், சுடர் வேலினைச் செலுத்திய வல்லவனே!... சுவாமிநாதப் பெருமாளே!...

நின் திருவடித் தாமரைகளே அடைக்கலம்!...
 
*** *** ***

இந்தத் திருப்பாடலை நாளும் ஓதிட, நம் மனதினைப் பொறுத்து - நமக்கு சில தெய்வீகச் செய்திகள் புலனாவதை உணரலாம்.
''கருத்தழிந்த காகத்தின் தவறு - தனிப்பதிவாக வரும்.

வியாழன், ஜனவரி 17, 2013

தை வெள்ளி - 01

thanjavur14
அமீசர் ஒரு பாகம் அகலாத அபிராமவல்லி
தைத்திங்கள்  - '' பொங்கல் " எனும் திருநாளுடன் ஒரு புத்தாண்டைப் போல, தெய்வ வழிபாட்டுடனும் இயற்கை வழிபாட்டுடனும் தொடங்குகின்றது. 

உண்டு மகிழவும் உடுத்தி மகிழவும் உற்றார் உறவினரைக் கண்டு மகிழவும் என பலவகையிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். ஆக நிறைந்த சிறப்புகளையும் பெருமைகளையும் உடையது தை மாதம் என்றால்  அது மிகையில்லை.

மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்குரிய  அந்த ஒரு நாளில் - பகல் ஆறு மாதங்கள். இரவு ஆறு மாதங்கள். சிறப்புடைய தை மாதம் பகல் பொழுதுடன் தொடங்குகின்றது. 

சூரியன்  தை முதல் ஆனி வரை வட திசையாகப் பயணம் செய்வது உத்தராயணம். இது  நல்ல காரியங்களைச்   செய்வதற்கான சிறந்த காலமாகும். சூரியன் ஆடி முதல் மார்கழி வரை தென் திசையாகப் பயணம் செய்வது தட்சிணாயணம்.  இந்த இரண்டு அயணங்களும் இணைந்ததே  ஓராண்டு ஆகும்.  எனவே  அயணங்களின் தொடக்க மாதங்களாக - தை மாதமும் ஆடி மாதமும்  தனிச்சிறப்பு பெற்ற மாதங்களாக விளங்குகின்றன.

ஆடி வெள்ளியும் தை வெள்ளியும்  - மஹாலக்ஷ்மியை, பராசக்தியை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாகத் திகழ்கின்றன.

பித்ருக்களுக்கான நீர்க்கடன்களை நிறைவேற்ற  ஆடி அமாவாசையும்,  தை அமாவாசையும்  உகந்தவை.

ஆடிக்கிருத்திகையும், தை மாதக் கிருத்திகையும்  - முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவதற்கான நட்சத்திரங்கள்.

உழவர் பெருமக்களுக்கு ஆடி மாதம் விதைக்கும் காலம் . தை மாதம் அறுவடைக் காலம் - என்ற வகையிலும் இரண்டு மாதங்களும் இணைகின்றன.

ஆக இந் அளில்,
ை மத்ின் மல் வெள்ளிக்கிழையில் ம்பிகையாரப் போற்றி வங்கற்கு என  ினாறு பேறுகையும் ந்ுளேண்டி அபிராமட்டர் அருளிய - "அபிராமல்லியின் ிருப்பிகத்ில்" இருந் அற்புதமான பாடல் ஒன்று. 

"அன்னை வருவாள்... அருள் அமுதைத் தருவாள்!..."

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்!

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே!

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!....

புதன், ஜனவரி 16, 2013

மகரஜோதி

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...


கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, விரதம் மேற்கொண்ட விநாடி  முதற்கொண்டு மகர ஜோதியினைத் தரிசிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன்  இருந்த பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் நாள்.

கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக - 

ஐயப்ப பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் 14-ஆம் தேதி நடந்தது.  


பந்தளம் அரண்மனையில் இருந்து கடந்த 12-ஆம் தேதி புறப்பட்ட திருஆபரண பவனி திங்கள் மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்று அழைத்து வர,

திருஆபரண பவனி 6.25 மணி அளவில், 

பக்தர்களின் சரணகோஷத்துடன் பதினெட்டாம்படி வழியாக திருஆபரணப் பெட்டி சன்னிதானத்தை வந்தடைந்தது. மற்ற இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருஆபரணப்பெட்டியினை ஸ்ரீகோயிலின் முன்பாக - தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக் கொண்டு திருநடையினை அடைத்தனர். 

தொடர்ந்து திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. 


சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருக்க - மாலை 6.35 மணிக்கு தீபாராதனை முடிந்த சில விநாடிகளில் 6.38 மணிக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் ''சுவாமியே சரணம் ஐயப்பா'' என பரவசத்துடன் கோஷமிட்டனர். 

மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.

சபரிமலையை சுற்றி குவிந்திருந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரசவத்துடன் ஜோதியை தரிசித்தனர். பக்தர்களின் சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.

ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 20ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால், 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப் படுவார்கள். 20ம் தேதி காலை பந்தளம் ராஜ பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. அன்று காலை 7 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் இந்தாண்டு மகர விளக்கு பூஜாகாலம் நிறைவு பெறும்.

விரத காலத்தில் பக்தர்களாகிய நாங்கள் அனுசரித்த நல்ல பழக்க வழக்கங்களுடன் கூடிய நெறிமுறைகள் என்றென்றும் எங்கள் மனதினில்  பதிந்திருக்கவும்,  

எங்களுக்கும் - எங்களால் பிறருக்கும் நன்மைகள் விளையவும்,

எங்கள் வாழ்க்கை மேன்மேலும் சிறப்படையவும் நல்லருள் புரிவாய் ஐயப்பா!....

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...

Images - Thanks to Google

செவ்வாய், ஜனவரி 15, 2013

தஞ்சாவூர் நந்தி

தஞ்சை பெரியகோவிலில் 
மகர சங்கராந்திப் பெருவிழா. 


தஞ்சை பெரியகோவில் எனப்படும் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  மகர சங்கராந்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி 108 பசுக்களுக்கு கோ பூஜையும் திருக்கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள நந்தி மிகப்பெரிய வடிவில் உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்திப் பெருவிழா ஆண்டு தோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 14.01.2013 திங்கள் மாலை 6 மணி அளவில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நிகழ்த்தப்பெற்று அதன்  பின்னர்  அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (15.01.2013 - செவ்வாய்) மாட்டுப்பொங்கல் அன்று மாலையில் நந்திகேஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர் 108 பசு மாடுகளுக்கு கோபூஜைகளும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் சிறப்புற நடைபெற்றுள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

திருச்சிற்றம்பலம்

மாட்டுப் பொங்கல்


பசுக்களும் காளைகளும்..

விலங்கு இனங்களில் மனிதனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை கால்நடைகள். அதிலும் குறிப்பாக  பசுக்களும் காளைகளும்...

வேறெந்த விலங்கிற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு. தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக பசு மட்டுமே "மா' என கத்தும். "மா' என்பது அம்மாவின் சுருக்கம். 


தாய்மை இன்றி பூவுலகில் ஏதும் இல்லை. தாய் - பெண்மை  - இல்லாமல் மனித குலம் இல்லை. பாலூட்டும் விலங்குகளில் மனிதனும் உள்ளடக்கம் என்கின்றனர்.

தாய் கூட, தான் பெற்ற பிள்ளைக்கு  குறிப்பிட்ட வயது  வரை மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். அதன் பின் -

மனிதன் தன் வாழ்நாளை பசுவின்  பாலைக் கொண்டே வாழ்ந்து முடிக்கின்றான்.  பசுவின்  பால் மனிதன் வாழும் காலத்தில் மட்டுமல்ல! .....

நமக்கு இன்னொரு தாயாக விளங்கும் பசுவை "கோமாதா' என வணங்குகிறோம். "ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று அப்பர் சுவாமிகளின் திருவாக்கு. 

திருநாவுக்கரசர்,  திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்திலும் மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் பசுவின் தன்மையை சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

இதே போல, காளைகளைக் கொண்டு வயலை உழுது, நாம் நமது உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். உழைப்பின் சின்னமான அதை, சிவபெருமான் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். 

அம்பிகையுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு "ரிஷபாரூடராக'' - ''விடை வாகனனாக'' காட்சி தருகிறார். சைவத் திருமுறைகளில் பசுவும் காளையும் மிக உன்னதமாக சிறப்பிக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்பவர் நீண்ட ஆயுள் பெறுவர் காலம் வாழ்வர் என ஆகமம் கூறுகின்றது.


பரந்தாமன் கோகுலத்தில் வாழ்ந்ததையும் வளர்ந்ததையும் மறக்க முடியுமா?....பசும் பாலில் இருந்து கிடைத்த வெண்ணெயை விரும்பி உண்டதால் கிருஷ்ணர் ''நவநீதகிருஷ்ணன்'' எனப்பட்டார். "நவநீதம்'' என்றால் "வெண்ணெய்'.

பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களையும் காளைகளையும் நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம். இதுவே தமிழரின் தனிப் பெரும் பண்பாடு.

நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, பசுவைக் காண்பது சுப சகுனம். அதுவும் கன்றோடு சேர்ந்த பசுவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. பசுவின் உடலில் சகல தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். 

தமிழில் ''மாடு'' என்றால் - செல்வம் - என்று அர்த்தம்.

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை. - 

திருக்குறள் காட்டும் தலை சிறந்த கருத்து இது. ஒருவன் பெற்ற செல்வங்களுள் கல்வி தான் அவனுக்குச் சிறப்பானது. அவனுடைய மற்ற செல்வங்கள் ஏதும் செல்வங்கள் அல்ல   என்பது ஐயன் திருவள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் கருத்து.

கால்நடைகளுடன் இணைந்த வாழ்வு தான் இயற்கையான வாழ்வு... அந்த வாழ்வு மீண்டும் மலர்வதாக....

வாழ்க கால்நடைச் செல்வங்கள்!....

திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் திருநாள்


ங்கல் நல்வாழ்த்ுகள்!...


அன்றைக்கு நாடு முழுவதும் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமாகத்தான் இருந்தது. சாகுபடி காலத்தில் நாடு செழிக்கவும் நல்ல மழை பொழியவும், கன்னிப் பெண்கள் மார்கழியில் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். மார்கழியில் நோற்ற நோன்பினை தை  முதல் நாளில் முடிப்பார்கள். 

அறுவடையில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக இந்த பூமித்தாய்க்கும், வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கதிரவனுக்கும்,

 ஆடி மாதம் முதற்கொண்டு துணைக்குத் துணையாய் நின்று தோள் கொடுத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உழைத்துச் சம்பாதித்த பச்சரிசியில் பொங்கல் வைத்துப் படைத்து வழிபட்டனர். 

பொங்கல் திருநாள்  என்பதே இயற்கை வழிபாடு தான்.

இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களாக  மாறியது ன்கின்றனர்.

பொங்கலன்று அதிகாலையில் அனைவரும்  எழுந்து நீராடி, முதல் நாளே சுத்தப்படுத்தி  ஆயத்தமாக வைத்திருந்த வீட்டு முற்றத்தை பச்சரிசி மாவினால் கோலம்  இட்டு அலங்கரிப்பர்.

தலை வாழையிலையில் பச்சரிசியுடன் புத்தம் புதிய காய்கறிகளையும்  வாழைப்பழங்களையும் வெல்லக்கட்டிகளையும் பசு நெய்யினையும் வைத்து புதிய பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்துகளைக் கட்டி மங்கலகரமாக திலகமிடுவர். குடும்பத்தில் உள்ள எல்லாரும் கூடியிருக்க வயதில் மூத்த பெண்கள்  முன்னின்று மஞ்சளிலோ பசுஞ்சாணத்திலோ பிள்ளையார் பிடித்து குங்கும திலகம் இட்டு அருகம்புல் சாற்றி  ,  

குத்து விளக்கினை ஏற்றி குல தெய்வத்தையும் கதிரவனையும் மனதார வணங்கி தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி நெஞ்சுருகி நின்று வழிபட்டு நல்ல விறகுகளைக் கொண்டு அடுப்பில் நிறைத்து புதுப் பானையில் அறுவடையாகி வந்த புது அரிசியினை இட்டு, முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். பாரம்பியாக சர்க்கப் பங்குடன் வெண்பங்கும் ைப்பர்.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத்ில் வன், மனைவி மக்களுாக எல்ாரும் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி மகிழ்வர். பொங்கலை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புறுவர். இது காலகாலமாக விளங்கி வரும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாகத்  திகழ்கின்றது எனில் மிகையில்லை. இருப்பினும்,

இந்த ஆண்டு காவிரியில் நீர் பற்றாக்குறை. தமிழகத்தில் பருவமழை தவறி விட்டது. வேதனைக்குரிய விளைவாகி விட்டது.  மேலும் இளம்பெண்கள் மீதான மிகோசானன்கொடுமைகள் - ில் எல்லாரையும் மிகும் பிப்பைய த்ுள்ள ிகழ்வுகள் ைநர் ில்லிிலும் ிழத்ின் சிலிகிலும் நந்ுள்ள

ாலம்ான் கஷ்டங்கத் ங்கிக் கொள்ளும் ினத் ேண்டும்.  இனி வங்காலத்ில் இப்பிப்பட்டொடுமைகள் யாருக்கும் ேரிருக்க இறையுளைச் சிந்ிப்போம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ... நல்ல வழி பிறக்கட்டும்..